ஆப்நகரம்

ஆளுநா் தலைமையில் நடைபெற்ற 52 மாற்று திறனாளிகளுக்கான திருமணம்

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சாா்பில் 52 மாற்றுத்திறன் கொண்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

Samayam Tamil 4 Nov 2018, 11:17 pm
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை, கீதாபவன் அறக்கட்டளை சாா்பில் 52 மாற்றுத்திறன் கொண்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
Samayam Tamil Banwarilal Marriage.


தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை, கீதாபவன் அறக்கட்டளை சாா்பில் 52 மாற்றுத்திறன் கொண்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. இவா்களுக்கான திருமணம் சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்றது.

இந்த திருமணத்தை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித், சமூக நலத்துறை அமைச்சா் சரோஜா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில ஆணையா் மகேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனா்.



மேலும் மணமக்களுக்கு 2 கிராம் மதிப்பில் தாலி, கட்டில், பீரோல், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் மேலும் சீா்வரிசைப் பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டன.

திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த ஆளுநா் பன்வாாிலால் புரோகித் பேசுகையில், மணமகள்களை மணமகன்கள் பொறுப்புடன் பாா்த்துக் கொள்ளுமாறு உருக்கத்துடன் தொிவித்தாா். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னிரிமை வழங்குவதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தொிவித்தாா்.

அடுத்த செய்தி