ஆப்நகரம்

குடிபோதையில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற விவசாயி!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி குடிபோதையில், மனைவியை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Samayam Tamil 11 Feb 2019, 1:48 pm
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி குடிபோதையில், மனைவியை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
Samayam Tamil 67924663


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர்துரைசாமி. 55 வயதாகும் துரைசாமி விவசயி ஆவார். இவருக்கு பல வருடங்களாக குடிபழக்கம் இருக்கிறது. குடிக்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி சண்டைபோடுவார் துரைசாமி. இவருக்கு 46 வயதான பூங்கொடி என்ற மனைவியும் , ஒரு மகனும் உள்ளனர்.

துரைசாமிக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளது. ஆனால் இவர் குடித்துவிட்டு வாகனம் ஓடுவதால் அடிக்கடி விப்பதில் சிக்கியுள்ளார்.இதனால் இவரது மனைவி பூங்கொடி குடிக்க வேண்டாம் என்று சண்டைபோட்டுள்ளார். இதுபோன்று அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவமடைந்ததுரைசாமி, இரும்பு கம்பியால் மனைவியை தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பூங்கொடி இறந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உதியூர் காவல்நிலையத்திற்கு சென்று துரைசாமி சரணடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரது வீட்டு சென்ற காவல்துறையினர் பூங்கொடியுன் உடலை மீட்டுகாங்கேயத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி