ஆப்நகரம்

Breaking : சாலை விபத்து... பறிபோன 6 உயிர்கள்

மதுரை அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Samayam Tamil 25 Oct 2019, 5:28 pm
மதுரை உசிலம்பட்டி அருகே இன்று பிற்பகல் 3 மணியளவில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உல்ளிட்டோரை ஏற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று மதுரை மாநகரை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
Samayam Tamil WhatsApp Image 2019-10-25 at 17.25.14.


எருமார்பட்டி என்ற இடத்தில் ஆட்டோ பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்திசையில் படுவேகமாக வந்த லாரி, ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேராக மோதியது.

சாலை விபத்துக்களை குறைக்க மதுக்கடைகளை மூட வேண்டும்- ராமதாஸ்

இந்தக் கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பள்ளி மாணவிகள மூன்று பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்ரு தீவிர சிகிச்சைப் பிரிவில் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போலீஸார், இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
விபத்து நடத்த இடத்தில் மீட்புப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை தேடி வருவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி