ஆப்நகரம்

கார் டயர் வெடித்து, அரசுப் பேருந்து மீது மோதி பயங்கர விபத்து; 6 பேர் பலியான சோகம்!

அரசுப் பேருந்தும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.

TNN 14 Jan 2018, 6:19 pm
கிருஷ்ணகிரி: அரசுப் பேருந்தும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.
Samayam Tamil 6 dead in shoolagiri car and govt bus accident
கார் டயர் வெடித்து, அரசுப் பேருந்து மீது மோதி பயங்கர விபத்து; 6 பேர் பலியான சோகம்!


சென்னையில் இருந்து 5 பேர் காரில் பெங்களூரு சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரியை அடுத்த சூளகிரி அருகே கார் சென்றது.

அப்போது காரின் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்ப்புற சாலையில் சென்றது.

அங்கு ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது.

பேருந்து அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து சேதமடைந்தது. இதில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பேருந்தில் வந்த 20 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 dead in Shoolagiri car and govt bus accident.

அடுத்த செய்தி