ஆப்நகரம்

BMW: பி.எம்.டபிள்யு., காருக்குள் நாகப்பாம்பு: 'ஷாக்கான’ உரிமையாளர்!

கோவையில் BMW காருக்குள் நாகப்பாம்பு ஒளிந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Nov 2018, 9:45 am
கடந்த 08.11.2018 அன்று திருப்பூரில் இருந்து முத்தூர்க்கு திருமணத்திற்காக,பனியன் கம்பெனி நிறுவனறும், அவர் தம்பி மகனும் 120 கீ.மீ வேகத்தில் வந்துள்ளனர். காரை தம்பி மகன் இயக்கி வந்துள்ளார்.
Samayam Tamil 3


காங்கயத்தை தாண்டும் பொழுது பாம்பின் மேல் கார் ஏறியுள்ளது, ஆனால் அவர் அதை கவனிக்கவில்லை. முத்தூர் அருகே வரட்டுக்கரை என்னும் ஊர் வரும் பொழுது பாம்பு, காரின் முன்னால் படம் எடுத்துள்ளது அதை கண்ட இருவரும் அதிர்ச்சி அடைந்து வரட்டுக்கரை அருகே தென்னங்கரைப்பாளையம் பிரிவு அருகே வெளிச்சத்தில் நிறுத்தியுள்ளனர்.
அருகில் உள்ளவர்கள் வந்து பார்க்கும் பொழுது பாம்பு காருக்குள் ஒழிந்து கொண்டது, உடனே தீயனைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து சுற்று முற்றிலும் பார்த்து விட்டு பாம்பு ஓடிவிட்டது என்று சொல்லி சென்று விட்டனர்.

காரில் வந்த இருவருக்கும் சந்தேகம் இருக்க BMW கார் நிறுவனத்திற்கு போன் செய்து கேட்டுள்ளனர், அதற்க்கு அந்த நிறுவனம் காருக்குள் எறும்பு கூட போகாது என்றும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் காலையில் காரை கொண்டு வாருங்கள் பார்ப்போம் என கூறியுள்ளனர் .
அதே போல் காரை காலையில் கோயமுத்தூர்க்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே பார்க்கும் பொழுது இடது பக்க சீட் மேட்டுக்கு அடியில் நாகபாம்பு சருண்டு படு த்துள்ளது.

அடுத்த செய்தி