ஆப்நகரம்

TN Fishermen: தமிழக மீனவர்கள் 6 பேர் ஈரானில் கைது!

துபாய்க்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் நாட்டுக் கடற்படை கைது செய்துள்ளது.

Samayam Tamil 3 Sep 2018, 2:17 pm
துபாய்க்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் நாட்டுக் கடற்படை கைது செய்துள்ளது.
Samayam Tamil Migrants1_20170830_350_630


ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூமி, பால்குமார், சதீஷ், துரைமுருகன், அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணத்தைச் சேர்ந்த மில்டன் ஆகிய 6 பேர் துபாயில் மீன்பிடி ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர்.

இவர்கள் துபாய் அருகே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஈரான் நாட்டு கடற்படை அவர்களைக் கைது செய்துள்ளது.

ஈரான் நாட்டு சிறையில் அடைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி