ஆப்நகரம்

6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!!

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 12 Nov 2019, 8:47 pm
சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் தற்போது மொத்தம் 22 அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகின்றன.
Samayam Tamil nmc


இந்த நிலையில், புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது. மத்திய -மாநில அரசுகளின் நிதியுதவியுடன் இக்ககல்லூரிகள் கட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதாவது, மருத்துவக் கல்லூரிகள் கட்ட ஆகும் மொத்த செலவில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் ரூ. 8120 கோடியில் 21 புதிய தொழிலுக்கு அனுமதி!!

அதன்படி, ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக தலா 100 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் ஆகிய இடங்களில் இந்தக் கல்லூரிகள் கட்டப்படவுள்ளன.

இக்கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 28 -ஆக உயரும்.

முன்னதாக, புதிதாக கட்டப்படவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு தனது பங்காக 1,950 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு, அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி