ஆப்நகரம்

கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 17 May 2020, 6:37 pm
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சில தளர்வுகளுடன் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை தமிழக அரசும் நீட்டித்திருந்தது. இருப்பினும், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு விவரங்கள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், 81 பேர் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 11,224ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் இன்று உயிரிழந்துள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 78ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழகத்தில் என்னென்ன தளர்வுகள்-முழு விவரம்!

அரசு பரிசோதனை மையங்கள், தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 61 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 3,26,720 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 13,081 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு


கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு


சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை தலைநகரில் 6750 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 10 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி