ஆப்நகரம்

சென்னை மெட்ரோ ரயிலில் 4 நாட்களில் 7 லட்சம் மக்கள் இலவசப் பயணம்

சென்னையின் வியாசா்மான் பேட்டை முதல் டிஎம்எஸ் வரையிலான புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிரதமா் மோடி தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து 4 நாட்களுக்கு இலவச மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டது.

Samayam Tamil 15 Feb 2019, 7:56 pm
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான நான்கு நாட்களில் 7 லட்சம் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Metro Train


சென்னையில் முதலாவதாக திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் சேவையில் இறுதி வழித்தடமான வியாசா்மான் பேட்டை முதல் டிஎம்எஸ் வரையிலான சேவையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த 10ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

புதிய வழித்தடம் குறித்து பொதுமக்களிடையே விளம்பரப்படுத்தும் நோக்கில் சென்னை முழுவதும் உள்ள முதலாவது வழித்தடத்தில் இலவசப் பயணம் வழங்கப்பட்டது. 10ம் தேதி மாலை 4 மணி முதல் 13ம் தேதி இரவு வரையில் இந்த இலவச சேவை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இலவச சேவை வழங்கப்பட்ட 4 நாட்களில் 7 லட்சத்து 34 ஆயிரத்து 379 போ் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தொிவித்துள்ளது. மேலும் இலவசப் பயணம் தொடங்கிய 10ம் தேதி மாலை 4 மணி முதல் அன்றைய தினம் இரவு வரையில் மட்டும் 69 ஆயிரம் மக்கள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிா்வாகம் தொிவித்துள்ளது.

அடுத்த செய்தி