ஆப்நகரம்

உண்டியல் சேமிப்பை புயல் நிவாரணத்திற்கு வழங்கிய சிறுமி

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி தீக்ஷா இதயக்கோளாறு, நுரையீரல் அறுவை சிகிச்சைக்காக உண்டியலில் சேமித்து வந்த பணத்தை கஜா புயல் நிவாரணத்துக்காக அரசிடம் வழங்கியுள்ளார்.

Samayam Tamil 8 Dec 2018, 7:50 pm
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி தீக்ஷா. இரண்டாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமிக்கு இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
Samayam Tamil 1544275759375.


இதனால் தீக்ஷாவுக்கு ஏற்கனவே ஒரு முறை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அவருக்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை செய்ய பெற்றோருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் தனக்குக் கிடைக்கும் காசுகளை உண்டியலில் சேமிக்கத் தொடங்கியுள்ளார் தீக்ஷா. இதுவரை 950 ரூபாய் சேர்ந்திருக்கும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியதால் தவித்து வரும் மக்களுக்கு அதனை வழங்க முடிவு செய்துவிட்டார்.
இதன்படி, கஜா புயல் நிவராண நிதியாக தனது உண்டியல் பணத்தை சிறுமி, அமைச்சர்களிடம் வழங்கியுள்ளார். சத்தியமங்கலத்தில் நடைபெற்ற இலவச சைக்கிள் வழங்கும் விழாவுக்காக வந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோரிடம் சிறுமி அந்தத் தொகையைக் கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து சிறுமியின் அறுவை சிகிச்சை செலவை அரசு ஏற்கும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி