தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டங்கள் நடக்கும். இதில் தங்கள் சுற்றத்தில் உள்ள பிரச்சனைகள், வேலை கோரி மனு அளித்தல் உட்பட உதவிகள் கோரி மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நேரில் அளித்துவிட்டு வருவர். இதில் அவ்வப்போது சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடக்கும்.
அந்த வகையில் இப்போது எங்கும் நடக்காத ஒரு சுவாரஸ்யத்தை அறங்கேற்றியுள்ளா ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த முதியவர் மலைச்சாமி(70). ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்த மலைசாமி அனைவரையும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை அளித்தார்.
மலைச்சாமி தன்னை பற்றிக் கூறுகையில், “நான் கடந்த 2004ஆம் ஆண்டுதான் பிறந்தேன். நாட்டில் நடக்கும் தீமைகளை அழித்து, குற்றச் செயல்களைத் தடுக்க, நன்மைகள் பல செய்வதுக்காக இப்போது உருவத்தை மாற்றிக்கொண்டு முதியவர் அவதாரத்தில் உள்ளேன். எனது வயது 16. என்னுடைய அழகுக்கு ஏற்ற பெண் என்றால் அது விளையாட்டு வீராங்கனை சிந்து மட்டுமே. அதனால், நான் அவரை தூக்கிக் கொண்டு வரப் போகிறேன். இதற்கு மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்க இப்போது இங்கு வந்துள்ளேன்” என்றார். இதை அங்கிருந்தவர்கள் தங்கள் மொபையில் போனில் பதிவு செய்துக் கொண்டனர். இந்த வீடியோ நமது செய்தி பக்கத்திலும் கிடைக்கிறது.
இதைக் கேட்டவுடன் சுற்றிக் கூடியிருந்த சிலர் பயந்து விலகிச் சென்றனர். பெரும்பாலானவர்கள் சிரிக்கத் தொடங்கினர். சம்பந்தப்பட்ட நபர் கையில் ஒரு பாலித்தின் பையுடன் அனைவரையும் மிக எளிமையாக தனக்குள் பல வித்தைகளை அடக்கி வைத்தவரை போல் பாவித்துக் கொண்டு ஆட்சியரிடம் அவர் கூறியதை மனுவாக அளிக்கக் காத்துக்கிடந்தார். ஒருவழியாக இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்விடம் கொடுத்தபோது அவர் செய்வதறியாது திகைத்தார்.
ஒருவரைக் கடத்திக் கொண்டு வந்து திருமணம் செய்வேன் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடமே மனு அளித்தபோதும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆட்சியர் மனுவைப் படித்தாரா இல்லையா என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. ஒருவேலை அவர் மனநலம் பாதிப்படைந்திருந்தாலும் அவரின் நிலை குறித்து அறிந்தாவது உரிய இடத்துக்கு அனுப்பி இருக்க வேண்டும் என அங்குக் கூடி இருந்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.
அந்த வகையில் இப்போது எங்கும் நடக்காத ஒரு சுவாரஸ்யத்தை அறங்கேற்றியுள்ளா ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த முதியவர் மலைச்சாமி(70). ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்த மலைசாமி அனைவரையும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை அளித்தார்.
மலைச்சாமி தன்னை பற்றிக் கூறுகையில், “நான் கடந்த 2004ஆம் ஆண்டுதான் பிறந்தேன். நாட்டில் நடக்கும் தீமைகளை அழித்து, குற்றச் செயல்களைத் தடுக்க, நன்மைகள் பல செய்வதுக்காக இப்போது உருவத்தை மாற்றிக்கொண்டு முதியவர் அவதாரத்தில் உள்ளேன். எனது வயது 16. என்னுடைய அழகுக்கு ஏற்ற பெண் என்றால் அது விளையாட்டு வீராங்கனை சிந்து மட்டுமே. அதனால், நான் அவரை தூக்கிக் கொண்டு வரப் போகிறேன். இதற்கு மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்க இப்போது இங்கு வந்துள்ளேன்” என்றார். இதை அங்கிருந்தவர்கள் தங்கள் மொபையில் போனில் பதிவு செய்துக் கொண்டனர். இந்த வீடியோ நமது செய்தி பக்கத்திலும் கிடைக்கிறது.
ஒருவரைக் கடத்திக் கொண்டு வந்து திருமணம் செய்வேன் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடமே மனு அளித்தபோதும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆட்சியர் மனுவைப் படித்தாரா இல்லையா என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. ஒருவேலை அவர் மனநலம் பாதிப்படைந்திருந்தாலும் அவரின் நிலை குறித்து அறிந்தாவது உரிய இடத்துக்கு அனுப்பி இருக்க வேண்டும் என அங்குக் கூடி இருந்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.