ஆப்நகரம்

சென்னையில் 10,000த்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 24 May 2020, 6:23 pm
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சில தளர்வுகளுடன் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை தமிழக அரசும் நீட்டித்திருந்தது. இருப்பினும், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு விவரங்கள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அந்த வகையில், தமிழகத்தில் இன்று மட்டும் 765 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், 44 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், 3 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 15,512லிருந்து 16,277ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். . இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 111 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 833 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை 8,324 பேர் குணமடைந்துள்ளனர்.

உள்நாட்டு பயணங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!

அரசு பரிசோதனை மையங்கள், தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 68 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 4,09,615 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 12,275 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு


சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் 587 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,989 லிருந்து 10,576 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி