ஆப்நகரம்

தமிழகத்தில் 78 லட்சம் பேர் மின்கட்டணம் செலுத்துவது கிடையாது

தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவதால் 78.55 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TNN 24 Nov 2016, 1:29 pm
சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவதால் 78.55 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil 78 lakh people not pay electricity bills
தமிழகத்தில் 78 லட்சம் பேர் மின்கட்டணம் செலுத்துவது கிடையாது


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ," வீடுகளில் இரு மாதங்களுக்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்கெனவே இருந்த இலவச 100 யூனிட்டை 200 யூனிட்டுகளாக உயர்த்தியது, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவசமாக இருந்த 500 யூனிட்டை 750 யூனிட்டுகளாக உயர்த்தியது ஆகியவை காரணமாக மொத்தம் சுமார் 1.93 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர்.

இதங்காரணமாக , 100 யூனிட் மட்டுமே மின்சாரம் பயன்படுத்தும் 78.55 லட்சம் பேர் மின்கட்டணமே செலுத்துவது கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட் இலவசம் என்ற மின்சார அளவை 200 யூனிட் என்று உயர்த்தியதன் மூலம் தற்போது 1 லட்சத்து 11 ஆயிரத்து 10 கைத்தறி நெசவாளர்கள் பலன் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மின்சார அளவை 500 யூனிட்டிலிருந்து 750 யூனிட்டாக உயர்த்தியதன் மூலம் 98 ஆயிரத்து 712 நெசவாளர்களும் பயன்பெறுகின்றனர்" என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி