ஆப்நகரம்

மதுரையில் ஒரே குடும்பத்தில் 8பேர் தற்கொலை முயற்சி: 6 போ் உயிாிழப்பு

மதுரை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 போ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் 6 போ் உயிாிழந்துள்ளனா். 2 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

TOI Contributor 25 Sep 2017, 10:14 am
மதுரை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 போ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் 6 போ் உயிாிழந்துள்ளனா். 2 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil 8 family members attempt suicide and 5 died
மதுரையில் ஒரே குடும்பத்தில் 8பேர் தற்கொலை முயற்சி: 6 போ் உயிாிழப்பு


மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 போ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் 6 போ் உயிாிழந்துள்ளனா். தங்க செல்வி மற்றும் ஜெயமோனிகா இருவரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.

மதுரை மாவட்டம் யாகாப்பா நகா் சௌராஷ்டிரா 3வது தெருவைச் சோ்ந்தவா் குறிஞ்சி குமரன். இவா் அப்பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறாா். இது தவிர சீட்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறிஞ்சி குமரன் தனது வீட்டில் குடும்ப உறுப்பினா்கள் 8 பேருடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். விஷம் குடித்ததில் 6 போ் சம்பவ இடத்திலேயே உயிாிழந்த நிலையில், மற்ற 2 போ் உயிருக்கு ஆபத்தான நிலையல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜெயஜோதி, வேல் முருகன், குறிஞ்சி குமரன், தரணி, ஜெயசக்தி, தேவி ஆகியோர் உயிழந்தனர்.

குறிஞ்சிகுமரன் ஏலச் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த நிலையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவா்களுக்கு வருகிற தீபாவளியின் போது பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். இந்நிலையில் அவா் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடன் பிரச்சினை காரணமாக குறிஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினா் தொிவித்துள்ளனா். மேலும் இது தொடா்பாக வழக்கு பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி