ஆப்நகரம்

அயன் பட பாணியில் கடத்தல் முயற்சி: ரூ.8 லட்ச மதிப்புள்ள தங்க பிளேடுகள் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 லட்சம் மதிப்புள்ள தங்க பிளேடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Feb 2018, 6:20 pm
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 லட்சம் மதிப்புள்ள தங்க பிளேடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil 8 lakhs rupees gold blade confiscated in madurai airport
அயன் பட பாணியில் கடத்தல் முயற்சி: ரூ.8 லட்ச மதிப்புள்ள தங்க பிளேடுகள் பறிமுதல்


மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை புலனாய்வு பிரிவு தலைவர் வெங்கடேஷ் பாபு தலைமையிலான அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட்விமானம் மூலம் மதுரை வந்த சென்னையைச் சேர்ந்த அபுதாஹீர் மைதீன் என்பவரின் பைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனையிடப்பட்டன.

அப்பொது அவர் பையில் உள்ள பாக்கெட்டில் 20 தங்கள் பிளேடுகள் சிக்கின. முதலில் அந்த பிளேடுகள் சாதரண பிளேடுகள் மாதிரி இருந்தது. ஆனால் அந்த பிளேடுகளை அமிலத்தில் போட்டு பார்க்கும்போது அவை தங்க பிளேடுகள் என்று கண்டறியபட்டுள்ளது.
மேலும் இதுபோல தங்க வளையத்தின் மீது அலுமினிய முலாம் பூசி, அதை கடத்த முயற்சி செய்துள்ளார். மேலும் இந்த பிளேடுகள் , வளையங்களின் மொத்த தொகை ரூ. 8 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி