ஆப்நகரம்

TN Fishermen: 8 தமிழக மீனவர்கள் கைது - இலங்கை அட்டூழியம்

இலங்கை கடற்படையினர் 8 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளது.

Samayam Tamil 3 Sep 2018, 11:14 am
இலங்கை கடற்படையினர் 8 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளது.
Samayam Tamil dffg


இலங்கையின் அரிப்பு என்னும் இடத்திலிருத்து 16 நாட்டிங்கல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன, எல்லை தாண்டி மீன் பிடித்ததால் அவர்களைக் கைது செய்ததாக அந்நாட்டுக் கடற்படை கூறியுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்படை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ சோதனை செய்யப்பட்டுள்ளது. பின் அவர்கள் புட்டாலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 3ஆம் தேதி (இன்று) வரை காவலில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

கைதான மீனவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி