ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திய தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

PTI 11 Dec 2016, 3:14 pm
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திய தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
Samayam Tamil 8 tn fishermen injured in attack by sl navy
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்


புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள் நேற்று மாலை நெடுந்தீவு பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் இரும்புக் கம்பி மற்றும் கயிறு பயன்படுத்தி மீனவர்களை கடுமையாக தாக்கியதாக மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் சேகர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் மணல்மேடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, நேற்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் 2500 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்ததில் மீன்பிடிக்காமல் வெறும் கையுடன் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

சுமார் 30 படகுகளில் இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது அத்துமீறி கல்லால் அடித்து, வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்ததாக ராமேஸ்வர மீனவ குழு தலைவர் சேசுராஜ் கூறியுள்ளார்.

Eight Tamilnadu fishermen were injured when they were allegedly attacked by the Sri Lankan Navy for fishing in their territorial waters.

அடுத்த செய்தி