ஆப்நகரம்

நீச்சல் பயிற்சியில் மூச்சுத் திணறல்; 8 வயது சிறுமி பலியான சோகம்

நீச்சல் பயிற்சியின் போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 13 May 2017, 2:35 pm
சென்னை: நீச்சல் பயிற்சியின் போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 8 year old dies when she is training in swimming pool
நீச்சல் பயிற்சியில் மூச்சுத் திணறல்; 8 வயது சிறுமி பலியான சோகம்


சென்னை முகப்பேரில் நீச்சல் குளம் ஒன்று உள்ளது. அங்கு கோடை விடுமுறையை ஒட்டி, ஏராளமானோர் நீச்சல் பயிற்சிக்காக வந்து செல்கின்றனர். அம்பத்தூர் அருகே உள்ள புதுநகரைச் சேர்ந்த பிஜூ, சினிமாத் துறையில் பணியாற்றி வருகிறார். அவருடைய மகள் ஆண்ட்ரியா(8) தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு பயின்று வருகிறாள். இந்நிலையில் தனது மகளை பிஜூ நீச்சல் பழக முகப்பேறு நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். தொடக்கத்தில் நீச்சல் குளத்தைக் கண்டு பிஜூ பயந்துள்ளார்.

பின்னர் பயிற்சியின் போது, அதிக அளவு நீரைக் குடித்து மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜே.ஜே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 year old dies when she is training in swimming pool.

அடுத்த செய்தி