ஆப்நகரம்

மதுரை: சிலிண்டர் வெடித்து 8 வயது சிறுமி பலி.. 6 வயது சிறுமிக்கு சிகிச்சை...

உசிலம்பட்டியில் டீ கடை நடத்திவந்தவர் வீட்டில் நடந்த தீ விபத்தில் இரு மகள்களும் படுகாயம் அடைந்த நிலையில், ஒரு சிறுமி பலி.

Samayam Tamil 31 Oct 2019, 6:05 pm
மதுரை, உசிலம்பட்டியில் டீ கடை நடத்திவருபவர் கருப்பையா (37). இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். முதல் மகள் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
Samayam Tamil 6.


வீட்டின் வாசலுக்குலேயே டீ கடையை நடத்தி வந்துள்ளார் கருப்பையா. இந்நிலையில் இன்று மாலை இரு மகள்களும் வீட்டிற்குள் இருந்துள்ளனர். கருப்பையா டீ கிடையில் வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென விடித்ததில் இரு மகள்களுக்கும் பயங்கர தீ காயம் ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் கருப்பையாவின் மீதும் தீ பற்றிக்கொண்ட நிலையில் கடையை விட்டு வெளியில் ஓடி வந்துள்ளார்.

கோவை மாநகரிலேயே இந்த நிலைமை: தலித் மக்களுக்கு மயானத்திற்கு செல்ல பாதை இல்லை!

உடனே அக்கம்பக்கத்தினர் தீ அணைக்க முயன்றதோடு, தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் தந்தனர். இதற்கிடையில், கருப்பையாவின் இரு மகள்களும் தீ காயங்களின் மீட்கப்பட்டு, ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டனர்.

Breaking: பாலியல் புகார்... சோலார் ஸ்கேம்... கேரளாவைக் கலக்கிய சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை...

அங்கு சிகிச்சை பெற்று அந்த நிலையில் கருப்பையாவின் முதல் மகள் பிரதீபா பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டாவது மகள் ஹேமலதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தை குறித்து உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி