சென்னை: மருத்துவப் படிப்பில் 85% இட ஒதுக்கீட்டு அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்கி, கடந்த மாதம் 22ஆம் தேதி தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2010-ம் ஆண்டு, இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட திருத்த விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஒபிசி என்ற அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும் என்றும், உள் இடஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதமானது என்றும் குறிப்பிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி,
மாநில பாடத்திட்ட மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே அந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று விளக்கமளித்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், மருத்துவப் படிப்பு சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான 85% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாணை ரத்து காரணமாக மருத்துவ மாணவர் சேர்க்கை மேலும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
85 percent quota cancelled by Chennai HC.
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்கி, கடந்த மாதம் 22ஆம் தேதி தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2010-ம் ஆண்டு, இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட திருத்த விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஒபிசி என்ற அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும் என்றும், உள் இடஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதமானது என்றும் குறிப்பிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி,
மாநில பாடத்திட்ட மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே அந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று விளக்கமளித்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், மருத்துவப் படிப்பு சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான 85% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாணை ரத்து காரணமாக மருத்துவ மாணவர் சேர்க்கை மேலும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
85 percent quota cancelled by Chennai HC.