ஆப்நகரம்

சென்னையில் மட்டும் இதுவரை 87.83 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல்

பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த ஜனவரி 1 முதல் இன்று வரை சென்னை மாநகராட்சியில் 87.39 மெட்ரிக் டன்கள் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 31 Jan 2019, 7:15 pm
பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த ஜனவரி 1 முதல் இன்று வரை சென்னை மாநகராட்சியில் 87.39 மெட்ரிக் டன்கள் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Samayam Tamil சென்னையில் கைப்பற்றப்பட்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்


கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. 14 வகையான பிளாஸ்டிக்குகளை தடை செய்த தமிழக அரசு, அதற்கு மாற்றாக 12 வகையான பொருட்களை பயன்படுத்த தமிழக மக்களை அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் 15 மண்டலங்களிலும் பிளாஸ்டிக் சோதனை நடைபெற்றது. இதில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை 87.39 மெட்ரிக் டன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் கூறியுள்ளது.

அடுத்த செய்தி