ஆப்நகரம்

இந்த சின்ன வயசுல இவன் செஞ்ச காரியத்தை பாருங்க!

மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்ற 8ஆம் வகுப்பு மாணவனை சக மாணவன் உடனே காப்பாற்றினார். மாணவனின் துணிச்சலை, மாவட்ட எஸ்.பி., பொதுமக்கள் பாராட்டினர்.

Samayam Tamil 12 Nov 2019, 5:28 pm
ஆபத்தில் சிக்கியவர்களை சமயோஜிதமாக சிந்தித்து உடனடியாக காப்பாற்றுவதில் பெரியவர்களே குழம்பிப் போகும் நிலையில் 8ஆம் வகுப்பு மாணவன் காப்பாற்றியுள்ள சம்பவம் கமுதி அருகே நடைபெற்றுள்ளது.
Samayam Tamil தற்கொலைக்கு முயன்ற சிறுவனை காப்பாற்றிய நண்பன்


யார் காலையோ பிடித்து முதல்வர் ஆனவர்: எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம்!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, பேரையூர் அருகேயுள்ள பகுதி கருங்குளம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், தனது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் சோகத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவர் நேற்று (நவம்பர் 11) பள்ளியில் உள்ள மரக்கிளையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை, அப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் கருங்குளத்தை சேர்ந்த அவரது நண்பரான வடிவேலன் என்ற மாணவர் பார்த்தார்.

ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன திருமாவளவன்

உடனே, தற்கொலைக்கு முயன்ற மாணவரை தோளில் தூக்கியதுடன் கூச்சல் போட்டுள்ளார். மாணவர்கள், ஆசிரியர்கள் வரும்வரை மாணவரை தோளில் தூக்கியபடியே நின்று கழுத்து இறுகாமல் தாங்கிப் பிடித்துள்ளார்.

அதன்பின் அங்கிருந்தவர்கள் மாணவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறித்த ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., வருண்குமார், மாணவர் வடிவேலனை அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். பொதுமக்களும் பாராட்டினர்.

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை?

அடுத்த செய்தி