ஆப்நகரம்

916 காளைகள்; 963 மாடுபிடி வீரர்கள்: இன்று முழுவதும் களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

அவனியாபுரத்தில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில், 916 காளைகள், 963 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

TOI Contributor 5 Feb 2017, 10:54 am
அவனியாபுரத்தில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில், 916 காளைகள், 963 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
Samayam Tamil 916 bulls and 963 youths were participated in avaniapuram jallikattu
916 காளைகள்; 963 மாடுபிடி வீரர்கள்: இன்று முழுவதும் களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!


இன்று காலை 8 மணி தொடங்கியுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. காலை ஜல்லிக்கட்டு தொடங்கியபோது, முதல் காளையாக குருநாதர் கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.









முன்பதிவு முறையில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டில், மொத்தம் 963 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், 916 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாடிவாசலுக்குப் பின்புறம் ஏராளமான காளைகள் தங்க வைக்கப்பட்டுள்ளன. சீறிப்பாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர். இதனை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ரசித்து வருகின்றனர்.

போட்டியின்போது, ஏதேனும் விதிமீறல் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க, சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கும் வகையில், சிறப்பு மருத்துவக் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டை ஒட்டி, அவனியாபுரம், வில்லாபுரத்தில் உள்ள 7 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஆட்சியர் வீர ராகவ் நேரடியாக மேற்பார்வை செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

916 bulls and 963 youths were participated in Avaniapuram Jallikattu.

அடுத்த செய்தி