ஆப்நகரம்

Breaking: திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை..! மீட்கும் பணி தீவிரம்

குழந்தையை மீட்க்கும் பணியில் தீ அணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

Samayam Tamil 25 Oct 2019, 7:36 pm
திருச்சி, மனப்பாறையை அடுத்த நடுக்காட்டு பட்டியில் மூடாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை தவறுதலாக விழுந்துள்ளது. சம்பவம் குறித்து குழந்தையில் குடும்பத்தினர் தீ அணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
Samayam Tamil 777


''தீபாவளிக்கு'' மூன்று நாட்கள் மது கடைகளுக்கு லீவா.? எடப்பாடியிடம் பரிசு கேட்கும் ''பொன்னர்''..!

நடுக்காட்டு பட்டிக்கு விரைந்த தீ அணைப்பு துறை வீரர்கள் பொதுமக்களின் உதவியோடு குழந்தையை மீட்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தகவலை மணப்பாறை வட்டாட்சி அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, வீட்டின் அருகே மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு, குழந்தையின் குடும்பத்தினருக்கு சொந்தமானதென தெரிய வந்துள்ளது. இரவு நேரமென்பதால் டார்ச் விளக்கின் வெளிச்சத்தை கொண்டு குழந்தையை மீட்கும் பணியில் தீ அணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

அடுத்த செய்தி