ஆப்நகரம்

கிரைண்டர் கல்லால் மூதாட்டி அடித்துக் கொலை

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 12 Jan 2017, 11:00 am
பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil a 60 year old woman found murdered
கிரைண்டர் கல்லால் மூதாட்டி அடித்துக் கொலை


பாடாலூர் அருகே தேரணி எனும் கிராமத்தில் வசித்து வரும் விசாலக்ஷ்மி விவசாய கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கணவனை இழந்த பின்னர் போராடி தனது 3 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த விசாலாட்சி தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், விசாலாட்சி யை காண அவரது உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த விசாலாட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த இடத்தில் ஆய்வு நடத்தினர்.

அப்போது, விசாலாட்சியின் உடல் அருகே கிரைண்டர் கல் கிடந்ததையொட்டி, அவரை யாரோ கல்லால் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணையை துவங்கியுள்ளனர்.

விசாலாட்சியின் சடலத்தை மீட்ட பாடாலூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குபப்திவு செய்துள்ள பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

A 60-year-old woman was found murdered near Padalur in Perambalur district in the wee hours of Wednesday. The victim was identified as M Visalakshmi, of Therani village.

அடுத்த செய்தி