வேலூர் மாவட்டம் , ஆலங்காயம் அடுத்த பூங்குளம் புதூர் பகுதியில் காட்டு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
நாகநேரி பகுதியை சேர்ந்த வேல் அரசன் (வயது 10) அக்கிராமத்தில் உள்ள தமது நண்பர்களுடன் இந்தத் தடுப்பணையில் இன்று காலை குளிக்க சென்றுள்ளான்.
தண்ணீரில் குளித்து கொண்டிருந்த ஆர்வத்தில், தடுப்பணை பகுதியை தாண்டி, திடீரென அவன் ஆழமான பகுதிக்கு சென்றதால் வேல் அரசன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.
தவலறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் தேடலுக்கு பின் வேல் அரசன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான் இதனால் அதிர்ச்சியடைந்த அவனது உறவினர்கள், வேல் அரசனின் உடலை சொந்த கிராமமான நாகநேரிக்கு கொண்டு சென்றனர்
தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்காயம போலீஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்