ஆப்நகரம்

சென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி; கட்டுமான நிறுவனம் மீது வழக்குப்பதிவு!

சாரம் சரிந்த விபத்துக்குள்ளான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Jul 2018, 10:08 am
சென்னை: சாரம் சரிந்த விபத்துக்குள்ளான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Construction Collapse


சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் 4வது மாடியில் ஜெனரேட்டர் பொருத்தும் பணிகள் நேற்று நடைபெற்றன. இந்நிலையில் மாலை 6.30 மணியளவில் கட்டட தூண் சாரம் திடீரென சரிந்து விழுந்தது.

இதனால் இடிபாடுகளில் 35க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து இடிபாடுகளில் சிக்கியிருந்த 17 பேர் முதல்கட்டமாக மீட்கப்பட்டனர்.

அவர்கள் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இங்கு பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

28 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமான நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான நிறுவன பொறியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

A Case filed against construction for work collapsed in Chennai.

அடுத்த செய்தி