ஆப்நகரம்

தாம்பரம் - கிருமி நாசினி தெளிப்பதில் இபிஎஸ் ஆட்சியில் முறைகேடு! விசாரணை தள்ளி வைப்பு!

தாம்பரம் மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிப்பதில் முறைகேடு நடைபெற்று தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 11 Feb 2023, 4:41 pm
கொரோனா தொற்று காலத்தில் தாம்பரம் மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிப்பதில் நடந்த பல லட்சம் ரூபாய் முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Samayam Tamil Madras high court


சென்னை, கவுரிவாக்கத்தைச் சேர்ந்த மக்கள் பசுமை இயக்க நிறுவனத் தலைவர் நாஞ்சில் சி.மனோகரன் தாக்கல் செய்த மனுவில், கொரோனா தொற்று பரவல் காலத்தில் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிப்பது போன்ற சுகாதார பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் 2019-20, 2020-21ம் ஆண்டுகளில் கிருமிநாசினி தெளிக்க எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது, எந்தெந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என விவரம் கேட்டு மூன்று முறை தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்ததாகவும், அதன்படி வழங்கிய தகவலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

EXCLUSIVE பூமியை நோக்கி வரும் சூரிய புயல்: என்னென்ன பாதிப்பு இருக்கும், எப்படி தப்பிக்கலாம்?

கிருமிநாசினி தெளிக்கும் பணிக்கு எந்த ஒப்பந்தமும் வழங்காமல், அரசு நிதி சுரண்டப்பட்டுள்ளதால், இதுசம்பந்தமாக சுதந்திரமான விசாரணை குழுவை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

ஓபிஎஸ் எடுக்கும் இறுதி முடிவு: எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி