ஆப்நகரம்

செவிலியரின் அலட்சியம்..! நியாயத்திற்குப் போராடும் பெற்றோர்.. வசமாகச் சிக்கிய கோவை அரசு மருத்துவமனை.!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்குப் போடப்பட்ட தடுப்பூசியை அப்படியே அகற்றாமல் விட்டதன் விவாகரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் மீது விசாரணை நடந்து வருகிறது.

Samayam Tamil 12 Sep 2019, 2:27 pm
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதிகளான பிரபாகரன் மற்றும் மலர் விழி ஆகியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த பிரசவமானது அப்பகுதியில் இயங்கிவரும் எம்.எஸ்.ஆர் அரசு மருத்துவமனையில்தான் நடந்தது. குழந்தை பிறந்த இரண்டாவது நாளில் அங்கேயே தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
Samayam Tamil 2


இந்நிலையில் மலர் விழி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட நாளிலிருந்து குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் உடல்நலத்தில் வேறு ஏதும் பிரச்சினை இருக்கலாம் எனப் பெற்றோர் அவ்வப்போது மருத்துவர்களை அழைத்துப் பார்த்துள்ளனர். ஆனாலும் குழந்தை சமாதானம் ஆகவில்லை.

தடுப்பூசி போடப்பட்ட குழந்தையின் கை வீங்கிக்கொண்டே வந்ததையடுத்து சந்தேகித்த பெற்றோர், தடுப்பூசி போடப்பட்ட இடத்தை சோதித்துப்பார்த்துள்ளனர். அதனையடுத்து சிரஞ்சியில் இருந்த ஊசி குழந்தையின் கையிலேயே இருந்துவந்ததை அறிந்துகொண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்குச் சென்று இதுகுறித்து புகார் கூறியுள்ளனர். அதன்பிறகு குழந்தையின் கையிலிருந்த ஊசியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

எனினும் மருத்துவ நிர்வாகம் இதுகுறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்காமலிருந்ததால் குழந்தையின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், தலைமை மருத்துவ அலுவலர் பணியிலிருந்த 3 குழந்தைகள் நல மருத்துவர்களிடம் இன்று விளக்கம் கேட்கப்பட்டு ஊசி செலுத்திய செவிலியரிடம் விசாரணை நடந்த வருகிறது.

அடுத்த செய்தி