ஆப்நகரம்

தேசிய அலுவல் மொழி: காயிதே மில்லத் சொன்னது என்ன? தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

காயிதே மில்லத் தொடர்பான கருத்தை பாடப் புத்தக்த்தில் நீக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 20 Feb 2023, 3:12 pm
ஏழாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் காயிதே மில்லத், தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என கூறியதாக இடம்பெற்றுள்ள தவறான தகவலை நீக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Qaid E Millat and anna


வழக்கு விபரம்

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஏழாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் 52ஆவது பக்கத்தில் கண்ணியமிகு தலைவர் என்ற தலைப்பில் காயிதே மில்லத் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாடத்தில், மொழிக்கொள்கை என்ற துணை தலைப்பில், சுதந்திரத்துக்குப் பின் ஆட்சி மொழியை தேர்வு செய்வதற்கான அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில், பழமையான தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என காயிதே மில்லத் பேசியதாக தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு : கடைசி நேரத்தில் மாறும் வாக்குகள் - யாருக்கு எவ்வளவு?

காயிதே மில்லத் இப்படி சொன்னாரா?

அந்த கூட்டத்தில், தமிழ் பழமையான மொழியாக இருந்தாலும், அதிக மக்கள் பேசும் மொழியாக இல்லாததால் அதை நாட்டின் அலுவல் மொழியாக அறிவிக்க வற்புறுத்தவில்லை என்றும், இந்துஸ்தானி, தேவநாகரி அல்லது உருது மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்கலாம் என்று அவர் பேசியிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று உண்மைகளை அரசியல் காரணங்களுக்காக மாற்றக்கூடாது என்றும் பள்ளி மாணவர்களுக்கு தவறான வரலாற்றை போதிக்க கூடாது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவில் கோரிக்கை!

இந்த தவறுகளை நீக்கி திருத்தக் கோரி பள்ளிக்கல்வித் துறை செயலாளர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழும இயக்குனருக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இரு பெண் அதிகாரிகள் மோதல்: அந்தரங்க படத்தை வெளியிட்டு புகார்!
தள்ளுபடி!

இந்த மனுவை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனுதாரர் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி