ஆப்நகரம்

காணாமல் போய் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள அதிசய பூனை... அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள அற்புதம்!!

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்துக்குட்பட் போர்ட்லேண்ட் நகரை சேர்ந்த விக்டர் உசோவ் என்பவரின் தொலைந்து போன பூனை 5 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Nov 2019, 9:17 pm
அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரை சேர்ந்த விக்டர் உசோவ், பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். "சாஷா" என பெயரிடப்பட்ட அந்த பூனை மீது அதிக கடந்த அன்பு வைத்திருந்தார் விக்டர்.
Samayam Tamil ca


இந்த நிலையில், கடந்த 2014 -ஆம் ஆண்டு வீட்டில் இருந்த சாஷா திடீரென காணாமல் போனது. இதனால் சோகத்துக்கு ஆளான விக்டர் போலீசில் புகார் அளித்து தனது பூனையை தேடினார். ஆனாலும் "சாஷா" கிடைக்கவில்லை.

145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானத்தில் ஏற்றிவிட்ட அமெரிக்கா!

இந்த நிலையில், தொலைந்து போய் 5 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 2 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கு அப்பால், நியூ மெக்சிகோவின் சாண்டா பி நகரில் சாஷா இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பூனையின் உடலில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோசிப்பை ஸ்கேன் செய்ததன் மூலம் விக்டரின் வசிப்பிடத்தை அறிந்த வன விலங்குகள் காப்பகம், அவரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தது.

அதனை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு அந்த பூனை விமானம் மூலம் சாண்டா பி நகரில் இருந்து போர்ட்லேண்டுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 5 ஆண்டுகளுக்கு பின் சாஷா, தனது உரிமையாளரான விக்டருடன் இணைந்துள்ள சம்பவம், உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி