ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு: தொடரும் ஆலோசனை - முதல்வர் எடுக்கும் முடிவு என்ன?

பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேசியுள்ளார்.

Samayam Tamil 31 Jul 2021, 2:36 pm
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவுநாளையொட்டி 100 மாணவ, மாணவிகள் எழுதிய புத்தக வெளியீட்டு விழா பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
Samayam Tamil tn school reopen


அமைச்சர் அன்பில் மகேஷ் புத்தகங்களை வெளியிட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை பிள்ளை கலந்துகொண்டு புத்தகங்களை பெற்றுக்கொண்டார்.
ஆகஸ்ட் 20 பள்ளிகள் திறப்பு? முதல்வர் வெளியிடும் அறிவிப்பு?
அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர், “நிச்சயம் இதனை நமது முதலமைச்சர் பார்வைக்கு எடுத்து செல்வோம். குழந்தைகள் படைத்திருக்கும் இந்த படைப்புகள், நிச்சயம் ஊக்கம் அளிக்கும்.

பள்ளிகள் திறப்பது குறிப்பாக ஏற்கனவே ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மருத்துவ வல்லுனர்களுடன் பேசி, பெற்றோர்களுடன் ஆலோசித்து பிறகுதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

“ஏற்கனவே 3 மாநிலங்களில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் வருவதற்கு கட்டாயம் இல்லை. வருபவர்கள் வரலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஆலோசனை மேற்கொண்ட பிறகு தான் கூற முடியும்.
ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு: உடனே இதை பண்ணிடுங்க!
பள்ளி கட்டணம் அதிகமாக வசூலிப்பது தொடர்பாக புகார்கள் வரும் பட்சத்தில், நிச்சயம் அந்த பள்ளிகளை சார்ந்தவர்களை அழைத்து நாங்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினோம். அவர்கள் அது போன்று செய்யவில்லை என கூறுகின்றனர். மேலும் புகார்கள் வரும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி