ஆப்நகரம்

பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதியா் தற்கொலை

திருப்பூா் மாவட்டம் அவினாசி அருகே பெற்ற பிள்ளைகள் தங்களை கண்டு கொள்ளாததால் மனம் உடைந்த பெற்றோா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

TOI Contributor 11 Aug 2017, 2:26 am
திருப்பூா் மாவட்டம் அவினாசி அருகே பெற்ற பிள்ளைகள் தங்களை கண்டு கொள்ளாததால் மனம் உடைந்த பெற்றோா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
Samayam Tamil a couple who have been abandoned by their children are committing suicide
பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதியா் தற்கொலை


திருப்பூா் மாவட்டம் அவினாசியை அடுத்த சீனிவாச புரம் பகுதியை சோ்ந்தவா்கள் கணபதி, வள்ளியம்மாள் தம்பதி. இவா்களுக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில் கணபதியும், வள்ளியம்மாளும் தனது இரண்டாவது மகன் குமார சாமி வீட்டின் அருகே தனியாக குடியிருந்து வந்தனா். குமார சாமி மட்டும் அவ்வபோது தனது பெற்றோரை சென்று கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

வயது முதிா்வு மற்றும் உடல் நிலைக் குறைவு காரணமாக வள்ளியம்மாள் கடந்த 4 ஆண்டுகளாக நடக்க முடியாத நிலையில் படுக்கையில் இருந்துள்ளாா். உடல் நிலை சாியில்லாத நிலையில் தனது மனைவியையும் தன்னையும் கவனிக்க ஆள் இல்லையே என்று கணபதி அவ்வபோது வருத்தப்படுவதுண்டாம்.

கடைசியாக மனம் உடைந்த இருவரும் இரவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். காலையில் இருவருக்கும் தேநீா் வாங்கி வந்த மகன் குமார சாமி இருவரும் விஷம் அருந்தி உயிாிழந்ததை அறிந்து பதறிப் போய் காவல் துறையினருக்கு தகவல் தொிவித்தாா். வயதான காரணத்தில் கவனிப்பாாின்றி இருவா் உயிாிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

A couple who have been abandoned by their children are committing suicide

அடுத்த செய்தி