ஆப்நகரம்

கோவளம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆலிவ் ரிட்லிஸ் ஆமை!

கோவளம் கடற்கரையில் இறந்த நிலையில், ஆலிவ் ரிலிஸ் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

Samayam Tamil 12 Jan 2019, 5:21 am
கோவளம் கடற்கரையில் இறந்த நிலையில், ஆலிவ் ரிலிஸ் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
Samayam Tamil WhatsApp Image 2019-01-11 at 22.53.39.


தூத்துக்குடி அருகில் முள்ளக்காடு கோவளம் கடற்கரையில் பகுதியில் நேற்று ஆலிவ் ரிட்லிஸ் கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில், கரை ஒதுங்கியது. இந்த ஆமை சுமார் 2 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் 30 கிலோ எடை கொண்டதாக இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் இறந்த கடல் ஆமையை மீட்டு ஆய்வுக்கு கொண்டு சென்றனர். கோவளம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்குவது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆனால், கடல் பகுதியில் ஏற்பட்ட மாசு காரணமாகத் தான் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகிறதா? என்று அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி