ஆப்நகரம்

சசிகலா டிஸ்சார்ஜ்: முடிவெடுக்கும் மருத்துவமனை நிர்வாகம்!

சசிகலாவை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Jan 2021, 10:23 am
சிறைத ண்டனையிலிருந்து விடுதலையான சசிகலா கொரோனாவிலிருந்து எப்போது விடுதலையாவார் என அவரது ஆதரவாளர்களும் அமமுகவினரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
Samayam Tamil Sasikala


சசிகலாவுக்கு கடந்த 20ஆம் தேதி மூச்சுத் திணறல், காய்ச்சல் ஆகியவை இருந்தன. கொரோனாவாக இருக்குமோ என அதற்கான பரிசோதனைகளும் பவுரிங் மருத்துவமனையில் நடைபெற்றது. ஆனால் கொரோனா இல்லை என்றே முடிவுகள் வெளியானது. தொடர்ந்து அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்த நிலையில் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 27ஆம் தேதி மருத்துவமனையில் இருந்தபடியே சிறைத்துறை அவரை விடுதலை செய்தது. சசிகலா உடல்நிலை குறித்து தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது மருத்துவமனை நிர்வாகம்.

சசிகலாவை வரவேற்க தயாராகிறதா அதிமுக? ஓபிஎஸ் மகன் மீது என்ன நடவடிக்கை?

அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அறிகுறிகள் இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவின் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து நாள்களாக செயற்கை சுவாசம் இல்லாமல் இயல்பாக சுவாசித்து வருவதாகவும், ரத்தத்தில் ஆக்ஜிசன் அளவு சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிகவுக்குள் வாரிசு மோதலா? எடப்பாடியின் பக்கா பிளான்!

துணையுடன் நடப்பதாகவும் ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலா எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்தும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி