ஆப்நகரம்

அதிமுக, தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்: ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

TNN 24 Dec 2017, 10:52 am
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil WhatsApp Image 2017-12-22 at 3.49.46 PM


தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள டிடிவி தினகரன் 5339 வாக்குகளும், அதிமுகவின் மதுசூதனன் 2738 வாக்குகளும், திமுகவின் மருதுகணேஷ் 1182 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக ஆதரவாளர் ஒருவர் டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒருவரை தாக்கியதால் அங்கு இரு அணி ஆதரவாளர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, டிடிவி ஆதரவாளரைத் தாக்கிய அதிமுக தொண்டரை போலீஸார் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேற்றி உள்ளனர்.

இந்தத் தகராறு காரணமாக வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி