ஆப்நகரம்

மது போதையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநரை சிறை பிடித்த மக்கள்

கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மது போதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டியதையடுத்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 23 Apr 2019, 2:25 pm
கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மது போதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டியதையடுத்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil buses


அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் ஓட்டுனர்கள் இரவு நேரங்களில் மது போதையில் வாகனங்களை இயக்கி வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் இருந்து வந்தது. அதேபோல வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் பேருந்து ஓட்டுனர்களின் செயல்பாடுகளை கண்காணிக்காததால் சில ஓட்டுநர்கள் மதுபோதையில் அதி வேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று இரவு TN39 N 0012 என்ற எண் கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான கோவை to திருச்சி
செல்லக்கூடிய பேருந்தானது கோவை அரசு மருத்துவமனை நிறுத்தம் அருகே இருந்து ஒண்டிபுதூர் வரை தாறுமாறாக ஓடியது.இப்படி சென்ற பேருந்தானது பல்வேறு பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஓடியது.

இதைதொடர்ந்து சுமார் எட்டு முப்பது மணி அளவில் இந்த பேருந்தானது ஒண்டிபுதூர் மேம்பாலம் அருகே திடீரென உரசியது. இதை சுதாரித்துக் கொண்டமுன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி சந்தேகத்தின் அடிப்படையில் சக பயணிகளிடம் ஓட்டுநர் மது போதையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஒன்று சேர்ந்த சகபயணிகள் ஓட்டுநர் மது போதையில் இருப்பதை உறுதிப்படுத்தி பேருந்தை ஒண்டிபுதூர் இருகூர் பிரிவு அருகே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பேருந்து ஓட்டுனர் தள்ளாடியபடி இருந்த சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகளை கோபத்தில் ஆழ்த்தியது.

அடுத்த செய்தி