ஆப்நகரம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ்.?

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

TNN 2 Jan 2017, 10:33 pm
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Samayam Tamil a familiar website says tamilnadu chief minister o panneerselvam gave resignation later to sasikala
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ்.?


அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முதல்வர் பதவியையும் அவரே ஏற்க வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பகிரங்கமாகே விருப்பம் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரையும் சசிகலா முதல்வராக வேண்டும் என்றார். அதிமுக நிர்வாகிகள் பலரும் சசிகலா முதல்வராவதற்கு ஆதரவு கூறினர்.

இந்நிலையில், இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து அவர் விரைவிலேயே பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று பேசப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாலை சசிகலாவிடம் அளித்ததாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி