ஆப்நகரம்

பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? நாளை நடைபெறும் விசாரணை!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரும் மனு மீது நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 18 Mar 2023, 1:38 pm
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் அணி வழக்கு தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாராணை நாளை நடைபெற உள்ளது.
Samayam Tamil eps and manoj pandian


அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி அவசர வழக்கு தொடர ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்ச் 26ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கியுள்ளது. இன்று அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் அண்ணாமலை? உருவாகும் எடப்பாடி எதிர்ப்பு அணி!
இந்நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் கோரினார். அவருக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் அனுமதி பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் அவர் அனுமதி கோரிய நிலையில் அவரும் அதற்கு அனுமதியளித்தார்.

இந்நிலையில் நாளை காலை பத்து மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனு மீது விசாரணை நடைபெறும்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: ஓபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன? திருச்சியில் திருப்பம் ஏற்படுமா?
ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் மூலம் தடை பெறும் வேலையில் இறங்கியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி