ஆப்நகரம்

சாப்பாடும் கொடுத்து பரிசும் கொடுக்குறாங்க: திருப்பத்தூர்காரங்க கொடுத்துவச்சவங்க!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கார்த்திக் உணவகத்தில் சாப்பிடவரும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசு வழங்கப்படுகிறது.

Samayam Tamil 1 Oct 2019, 11:11 am
என்னதான் வீட்டில் விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும் ஹோட்டலுக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உற்சாகம் தரக்கூடியதாகவும், மனதிற்கு விருப்பமானதாகவும் இருக்கிறது. இருப்பினும் சில உணவகங்களில் வேண்டிய உணவை ஆர்டர் செய்துவிட்டு மணிக்கணக்காக காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்படும். ‘எனக்கு இன்னைக்கு வேணும்’ என்று சர்வரிடம் நினைவுபடுத்தாவிட்டால் அவர் மறுநாள் வந்துதான் இட்லிக்கு சட்னி ஊற்றுவார்.
Samayam Tamil சாப்பாடும் கொடுத்து பரிசும் கொடுக்குறாங்க_ திருப்பத்தூர்காரங்க கொடுத்துவச்சவங்க


ஆனால் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள கார்த்திக் உணவகம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை வரும்போதும் அவர்களுக்கு இனிமையான அனுபவமாக மனதில் பதிய பெரு முயற்சி எடுக்கிறது. சாப்பிட்ட உணவுக்கு பில் கொடுக்கும் போது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்படியாக பரிசுகள் வழங்குகின்றனர்.

காலையில் உணவு சாப்பிட செல்பவர்களுக்கு செய்தி தாள் கொடுக்கிறார்கள். இது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாப்பிட செல்லும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பரிசு பொருள் கொடுத்து அசத்துகிறார்கள். பெற்றோர்களுடன் சாப்பிட செல்லும் குழந்தைகளுக்கும் அவர்கள் விரும்பும் பொருள்களை பரிசாக கொடுத்து உற்சாகப்படுத்துகிறார்கள்.

உணவகத்தில் உணவு சாப்பிடும் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு மீண்டும் பரிசு தந்து அசத்துகிறார்கள். மிச்சம் வைக்காமல் சாப்பிட சிறு வயது முதலே பழக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவே இந்த செயல்பாடு என்று உணவகத்தின் உரியமையாளர் தெரிவிக்கிறார்.

அடுத்த செய்தி