ஆப்நகரம்

ஆர்.டி .ஒ அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி !

விருத்தாசல மாவட்டம், ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர், தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

TNN 17 Nov 2017, 11:44 am
விருத்தாசல மாவட்டம், ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர், தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil a lady self immolate before rto office in virudhachalam
ஆர்.டி .ஒ அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி !



கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி பூங்காவனம் . இவருடைய மகன் செல்வகுமார். ராமச்சந்திரன் இறந்துவிட்டதால் பூங்காவனம் நகராட்சியின், தற்காலிக துப்புரவு பணியில் வேலை செய்து வந்தார்.

புதுப்பேட்டை பகுதியில் வசித்து வந்த இவர், அந்த வீடு முற்றிலும் சேதமடைந்ததால் அங்கு புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கினார். இந்த சமயத்தில் பூங்காவனத்தின் உறவினர்கள் சிலர், அவர் கட்டிவரும் வீட்டின் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி உரிமை கோரினர்.

இதையடுத்து பூங்காவனம் தனது இடத்தை மீட்டு தரக்கோரி விருத்தாசலம் காவல் நிலையம், ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனு கொடுத்தார். ஆனால் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த பூங்காவனம் நேற்று மதியம் 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் விருத்தாசலம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்து,யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு, தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்த அங்கிருந்த அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் ஓடிவந்து தீப்பெட்டியை பிடுங்கியதோடு, அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த, ஆர்.டி.ஓ. சந்தோஷினி சந்திரா, தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் விருத்தாசலம் போலீசார் பூங்காவனத்தை சமாதானப்படுத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அடுத்த செய்தி