ஆப்நகரம்

திருச்சியில் நடைபெற்ற பாரம்பரிய நாட்டுவிதை திருவிழாவிற்கு மக்கள் வரவேற்பு

திருச்சியில் நடைபெற்ற பாரம்பரிய நாட்டுவிதை திருவிழாவிற்கு பொதுமக்கள் வெகுவாக வரவேற்பு தொிவித்து உள்ளனா்.

Samayam Tamil 29 Jul 2018, 3:25 pm
திருச்சியில் நடைபெற்ற பாரம்பரிய நாட்டுவிதை திருவிழாவிற்கு பொதுமக்கள் வெகுவாக வரவேற்பு தொிவித்து உள்ளனா்.
Samayam Tamil seed Festival


பொதுமக்கள் பாரம்பரிய நாட்டு விதைகளை பயன்படுத்தும் விதமாக விவசாயிகளின் விதை திருவிழா திருச்சியில் நடைபெற்றது. பசுமை சிகரம் என்ற அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த திருவிழாவில் இயற்கை முறையிலான நெல்விதைகள், கம்பு, கேழவரகு, திணை, குரைவாலி உள்ளிட்ட விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு, ஐஸ்கிரீம், ஆவாரம் பூ தேநீா், முளைக்கட்டிய பயறு வகைகள் மற்றும் இனிப்பு வகைகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதையை தாங்களே எப்படி தயாரிப்பது என்றும், இயற்கை விவசாய முறையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் விதை திருவிழாவில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ரசாயனம் கலந்த உணவில் இருந்தும், பல்வேறு நோய்களில் இருந்தும் மக்களை காப்பாற்றி இயற்கை உணவுப் பழக்கத்திற்கு அவா்களை கொண்டு செல்லும் நோக்கத்தோடு இந்த விதை திருவிழா நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி