ஆப்நகரம்

அதிமுக ஊழல் புகார் எதிரொலி: சுதாரித்து கொண்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்..!

அதிமுக சட்ட ஆலோசனை குழு நியமனம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு.

Samayam Tamil 12 Aug 2021, 2:12 pm
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் ஊழல் புகார் தொடர்பான நடவடிக்கைகளையொட்டி சட்ட ஆலோசனை குழுவை நியமனம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உத்தரவிட்டுள்ளனர்.
Samayam Tamil file pic


அது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் பலர் மீது ஆளும் கட்சியினரின் தூண்டுதலால், பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் வழக்குகள் புனையப்படுவது நாளுக்கு நான் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கழக பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அள்ளும் பகலும் அயராது ஈடுபட்டு வரும் கழகத்தை சேர்ந்த அனைவருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றென்றும் பாதுகாப்பு அரணாக திகழும் என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கிறேன்.

அரசியல் காழ்புணர்ச்சியால், திமுகவினரின் தூண்டுதலால் கழகத்தினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் வகையில், கழகத்தின் சார்பில் கழக சட்ட ஆலோசனை குழு கீழ்கண்டவாறு அமைக்கப்படுகிறது.

கழக சட்ட ஆலோசனை குழு:

டி. ஜெயக்குமார்: அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர், வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்

என். தளவாய்சுந்தரம், அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்

சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர்

மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ

இன்பதுரை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

பாபுமுருகவேல் முன்னாள் எம்எல்ஏ

நம் அரசியல் எதிரிகளால் காழ்புணர்ச்சியோடு பொய் வழக்குகளை பதிவு செய்யும்போது, அத்தகையவர்களுக்கு கழக சட்ட ஆலோசனை குழு, அந்த வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும், எனவே, கழக உடன்பிறப்புகள், மேற்கண்ட குழுவினரை தொடர்புகொண்டு உரிய தீர்வு காணுமாறு கேட்டு கொள்கிறோம்.

என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி