ஆப்நகரம்

காதலியை தாக்கியதால் போலீசில் சிக்கிய வழிப்பறி கொள்ளையன்: சென்னையில் பலே..!!

சென்னை: காதலியை தாக்கியதால் வழிப்பறி கொள்ளையன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Dec 2018, 11:52 am
பெண்ணுடன் தகராறு செய்த நபரை பிடித்து விசாரத்ததில், அந்த ஆண் வழிப்பறி கொள்ளை குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது போலீஸாருக்கு தெரியவந்தது.
Samayam Tamil வழிப்பறி கொள்ளையனை காட்டிக்கொடுத்த காதலி- நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்..!!


பழவந்தாங்கலை சேர்ந்த முத்தையா தினேஷ் (27) என்பவர் அதேபகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அவர்கள் இருவரும் பழவந்தாங்கலில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். திடீரென அப்பெண்ணுக்கும், முத்தையா தினேஷுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காதலியின் கண்ணத்தில் முத்தையா தினேஷ் அடித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் போலீசில் புகார் தெரிவித்தார்.

அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலிசார், முத்தையா தினேஷனை கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் அவரிடம் கைரேகை பரிசோதனை செய்த போது அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன. முத்தையா தினேஷ் கைரேகையை தங்களிடமிருந்த ஆவணங்களோடு ஒப்பிட்டு பார்த்தத்தில், மடிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நாட்களாக நடைபெற்ற 8 வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

மேலும், அந்த நபர் பல சினிமா திரைப்பட நட்சத்திரங்களுக்கும், தொலைக்காட்சி கலைஞர்களும் உடற்பயிற்சி நிபுணராக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உடனே பெண்ணை தாக்கியது மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , இளைஞர் முத்தையா தினேஷ் கைது செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி