ஆப்நகரம்

எருது விடும் விழா: கிருஷ்ணகிரி அருகே ஒருவர் பலி!

கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Jan 2020, 11:53 am
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி என்றால் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சுற்று வட்டாரங்களில் எருது விடும் விழா நடைபெறுகிறது.
Samayam Tamil எருது விடும் விழா


எருது விடும் விழாவில் பெரிய மைதனாத்தில் காளைகள் ஓடவிடப்படும், அந்த சமயம் மேள தாளங்கள் வாசிக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த வண்ணாத்திபட்டியில் நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றது.

தென் மாவட்டங்களில் களைகட்டும் ஜல்லிக்கட்டு!

மேள தாள சத்தம் கேட்டு ஒரு மாடு பாய்ந்து ஓடியபோது அதே ஊரை சேர்ந்த, முருகன் (40) என்பவர் அதை பிடிக்க முயன்றார். அப்போது மாடு முருகனை முட்டித்தள்ளி, அவரது உடல் மீது ஏறி நடந்து சென்றது.

இதனால் பலத்த காயமடைந்த அவரை, அருகிலிருந்த மக்கள் அஞ்செட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, முருகன் உயிரிழந்தார். இது குறித்து, அஞ்செட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் சோகம்: நீளும் காயமடைந்தோர் பட்டியல்!

இதேபோல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 66 பேர் மாடு முட்டி காயமடைந்தனர். பாலமேட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் 26 பேர் காயமடைந்தனர். திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காயமடைந்த வீரர்கள், பார்வையாளர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதுவரை ஏழு பேர் மாடு முட்டி காயமடைந்துள்ளனர். களத்தின் அருகிலேயே ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி