ஆப்நகரம்

நாமக்கல்: கொல்லிமலை உச்சியில் இருந்து குழந்தைகளை வீசி கொன்ற தந்தை..

நாமக்கல், செம்மேடு - சீக்குப்பாறை மலை உச்சியில் இருந்து வீசப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடலை தேடி வருகின்றனர்.

Samayam Tamil 13 Nov 2019, 7:54 pm
குடும்பத் தகராறு காரணமாக தனது இரண்டு குழந்தைகளையும் மலை உச்சியிலிருந்துக்கு பள்ளத்தாக்கில் வீசிய தந்தையின் கொடூர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் நிலையை குறித்து மீட்பு பனி நடந்து வருகிறது.
Samayam Tamil நாமக்கல்: கொல்லிமலை உச்சியில் இருந்து குழந்தைகளை வீசி கொன்ற தந்தை..


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சீக்குப்பாறை மலை உச்சியானது சுற்றுலா பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு உள்ள சீக்குப்பாறை வியூ பாய்ண்ட் 4,265 அடிக்கு மேலே அமைந்துள்ளது.

இந்நிலையில் இதற்கு அருகில் உள்ள 150 பள்ளத்தாக்கில் 40 வயது தக்க நபர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளான ஸ்ரீராஜ் (8), கவியரசி (5) ஆகியோரை கொண்டு சென்று வீசியதாக புகார் வந்துள்ளது.

நீலகிரி: நிலச்சரிவால் வலுவிழக்கும் கட்டிடங்கள்.. நகராட்சி அதிகாரிகள் கவனமாக செயல்பட கலெக்டர் உத்தரவு..!

இதனை விசாரித்த கொல்லிமலை போலீசார் சம்பவத்தை உறுதி செய்ததோடு பள்ளத்தில் வீசப்பட்ட இரு குழந்தைகளும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

காற்று மாசுப்பாட்டை ஏன் கட்டுப்படுத்தல? ... தமிழக அரசின் மீது வழக்கு !!

இதையடுத்து ஸ்ரீராஜ், கவியரசி ஆகியோரின் உடலை பள்ளத்தாக்கிலிருந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக பெற்ற குழந்தைகளை பள்ளத்தில் வீசி விட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் தந்தையை கைது செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி