ஆப்நகரம்

'' நாளைய முதல்வர் விஜயபாஸ்கர் ''... அமைச்சர் தந்த அரிசி மூட்டைதானா இது?

அமைச்சர் விஜயாபாஸ்கர் மக்களுக்கு வழங்கிய இலவச அரிசி மூட்டையில் நாளை முதல்வர் என்ற வாக்கியம் கொண்ட புகைப்படம் வைரலானதையடுத்து அமமுக கட்சியின் ஐடி ஊழியர் கைது.

Samayam Tamil 11 May 2020, 7:28 pm
தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் மனஸ்தாபங்கள் இருப்பதாக முணுமுணுக்கப்பட்டு வருவது ஒரு புறம் இருக்க, அடுத்த முதல்வர் விஜயபாஸ்கர்தான் என்று யாரோ ஒருவரால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil நாளைய முதல்வர் விஜயபாஸ்கர்


அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியாக இருப்பது புதுக்கோட்டை. இந்நிலையில், கொரோனா பேரிடர் நிதியாக அம்மாவட்டத்துக்கு விஜயாபாஸ்கர் தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதில் அவர் வழங்கிய அரிசி மூட்டையில், விஜயபாஸ்கரின் பெயருக்கு கீழ் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சர் என்று குறிப்பிட்டு, புகைப்படத்துக்கு மேலே நாளைய முதல்வர் என்று எழுதப்பட்டிருந்த புகைப்படம் சமூக ஊடங்களில் வைரலாகியுள்ளது.


இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் ஒருவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார், பல கட்டங்களில் விசாரணை நடத்தி, விழுப்புரத்தைச் சேர்ந்த அமமுக கட்சியின் ஐடி பிரிவு செயலாளர் முத்துக்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

பிரதமருடன் ஆலோசனை: முதல்வர் பழனிசாமி வைத்த கோரிக்கைகள் என்ன?

ஆனால், வாட்சப், ஃபேஸ்புக் என்று பல வலைதங்களில் பலரால் பகிரப்பட்ட அந்த புகைப்படம் அமமுகவின் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதற்காக தங்களது கட்சி பணியாளரை கைது செய்தது கண்டித்தக்கது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி