ஆப்நகரம்

சர்ச்சையை கிளப்பிய ஜெயலலிதா சிலை; அதிமுக தலைமையகத்தில் விரைவில் புதிய சிலை!

சென்னை: அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது.

Samayam Tamil 23 Oct 2018, 2:35 pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அவரது 7 அடி உயர வெண்கல சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
Samayam Tamil Jaya


அப்போது சிலையை வடிவமைத்த பிரசாத் என்பவருக்கு முதலமைச்சர் தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்தார். ஆனால் ஜெயலலிதாவின் சிலை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.

அக்கட்சி தொண்டர்களே சிலையைப் பார்த்து, யார் இது என்று கேட்கும் அளவிற்கு முகம் மாறுதல் அடைந்து காணப்பட்டது. சிலர் வளர்மதி போன்று இருப்பதாகவும், முதலமைச்சரின் மனைவி போன்று இருப்பதாகவும் கேலி செய்தனர்.

இதையடுத்து ஜெயலலிதாவின் புதிய சிலை உருவாக்கப்பட்டு வந்தது. இந்த சிலை விரைவில் அதிமுக தலைமையகத்தில் திறந்து நிறுவப்பட்டு திறந்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

A new statue of former CM J Jayalalithaa to be installed in AIADMK headquarters soon.

அடுத்த செய்தி