ஆப்நகரம்

டெல்லி நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு புதிய மனு: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிக்கை!

எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 8 Apr 2023, 7:44 am
அதிமுக உட்கட்சி விவகாரம் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்து வருகிறது. மாறி மாறி இரு தரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும், மேல்முறையீடு செய்யவும் என சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil eps


பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி உத்தரவு ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக வந்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் இறுதி விசாரணை ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை: சென்னையில் என்னென்ன நிகழ்ச்சிகள்? முழு விவரம்!எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு புதிய ரிட் மனு ஒன்று நேற்று (ஏப்ரல் 7) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “கர்நாடகா சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக தரப்பில் வேட்பாளர்களை நிறுத்த கட்சி திட்டமிட்டுள்ளது. அங்கு தேர்தல் நெருங்குவதால் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் வகையிலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வகையிலும், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் தீர்வு கிடைக்கல, மக்கள் மன்றத்துக்கு செல்கிறோம்: ஓபிஎஸ் அணி முடிவு!
மேலும் அதற்கான தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்த உத்தரவை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி (திங்கள் கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி