ஆப்நகரம்

தஞ்சை தேர் விபத்து: விசாரணை குழுவை அமைத்த தமிழக அரசு!

தஞ்சை தேர் விபத்து தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Apr 2022, 1:41 pm
தஞ்சாவூர் அடுத்த களிமேடு அப்பர் கோவிலில் 94ஆவது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு தேரோட்டம் நடைபெற்றது. இன்று (ஏப்ரல் 27)அதிகாலை 3 மணியளவில் மின்சாரம் பாய்ந்ததில் தேர் தீ பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், 17 பேர் படுகாயமடைந்தனர்.
Samayam Tamil senthil balaji


பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்வத்துக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர்.
தஞ்சை தேர் விபத்து: சம்பவ இடத்துக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின்
தேரின் ஒரு பகுதி மின்சார வயரில் சிக்கி விபத்து நடந்துள்ள நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விபத்து தொடர்பாக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வருவாய்த் துறைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் இந்த ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாள்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, இது தேர் திருவிழா அல்ல, சப்பர ஊர்வலம். அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஊர் மக்களால் நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

அடுத்த செய்தி